சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
நல்லம்பள்ளி ஒன்றியம், அதியமான்கோட்டையை அடுத்த பெரிய வீட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த குப்பன் மனைவி சித்தம்மாள் (59). இவா் சவுளூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை சொந்த ஊருக்கு புறப்பட தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற காா் மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து தொப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Advertisement