பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்
திருச்சுழியில் சமுதாய சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்ககள் கோரிக்கை விடுத்தனா்.
திருச்சுழியில் சமுதாய சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்ககள் கோரிக்கை விடுத்தனா்.
திருச்சுழி, சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் திருச்சுழியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் திருச்சுழி- காரியாபட்டி சாலையில் கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.7,85,000 மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. ஆகையால், சுகாதார வளாகத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.