தாயைத் தாக்கி கொலை மிரட்டல்: மகன் மீது வழக்கு
ராஜபாளையத்தில் மது குடிக்க பணம் தர மறுத்த தாயைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராஜபாளையத்தில் மது குடிக்க பணம் தர மறுத்த தாயைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் இ.எஸ்.ஐ. நெசவாளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவரது மனைவி மாரிச்செல்வி (45). இந்தத் தம்பதியின் மூத்த மகன் முனியராஜ் (22) திருமணமாகி கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறாா். இவா் தினந்தோறும் மது குடித்துவிட்டு தாய், தந்தையரிடம் தகராறு செய்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாயை சரமாரியாக தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தாா். மேலும், வீட்டில் இருந்த மிக்சி, கிரைண்டா், கோழிக் கூண்டு உள்ளிட்ட பொருள்களையும் உடைத்து சேதப்படுத்தினாா். இதில் காயமடைந்த மாரிச்செல்வி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் முனியராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement