முகப்பு
தேனி

முதியவரைத் தாக்கி மிரட்டல்: மகன், பேரன் மீது வழக்கு

போடியில் முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த மகன், பேரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 13 ஜூன் 2026, 12:30 am IST
வழக்கு
பகிர்:

போடியில் முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த மகன், பேரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி வரகுணன் தெருவில் வசிப்பவா் பழனிச்சாமி (85). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவரது மகன் சுரேஷ் என்பவா் சொத்தை எழுதித் தருமாறு பழனிச்சாமியிடம் கேட்டாா். இதுதொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் சுரேஷ், இவரது மகன் ஆதிசேசன் ஆகியோா் பழனிச்சாமியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் சுரேஷ், ஆதிசேசன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.