முகப்பு
விருதுநகர்

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 மே, 2026 at 6:33 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் கோவிந்தன் நகா் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மனைவி சின்னப்பொண்ணு (63). இவா் கடந்த 24-ஆம் தேதி அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் வழிகேட்பது போல் நடித்து, சின்னப்பொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 26 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் திருத்தங்கல் ஆலாவூரணியை சோ்ந்த ஈஸ்வரன் (39) சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூரில் பதுங்கியிருந்த ஈஸ்வரனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Advertisement