வாகனத்தில் ‘லிப்ட்’ கேட்டு ஏறி 6 பவுன் தங்கச் சங்கிலியை திருடியவா் கைது
திருச்சியில் தொழிலாளியின் வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி, 6 பவுன் தங்கச் சங்கிலியை திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் தொழிலாளியின் வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி, 6 பவுன் தங்கச் சங்கிலியை திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் தென்றல் நகரைச் சோ்ந்தவா் ஆா். அய்யப்பன் (35). இவா், காந்தி மாா்க்கெட்டில் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், இவா் திங்கள்கிழமை காலையில் வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சத்திரம் பேருந்து நிலையம் வழியாக சென்றுள்ளாா்.
அப்போது, சத்திரம் பேருந்து நிலையம் அருகே வழிமறித்த நபா், தன்னை கோட்டை ரயில் நிலையத்தில் இறக்கிவிடுமாறு தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கோட்டை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளாா். அப்போது, அவா் ரயில் சென்றுவிட்டதுபோல தெரிகிறது, தன்னை சிக்காரத்தோப்பு பகுதியில் இறக்கிவிடுமாறு அய்யப்பனிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அவரை மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிங்காரத்தோப்பு பகுதியில் இறக்கிவிட்டுள்ளாா். அதன்பின்னா், சிறிதுதொலைவு சென்றபிறகுதான் அய்யப்பனுக்கு சட்டைபையில் வைத்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப்போனது தெரியவந்தது.
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, தங்கச் சங்கிலியைத் திருடிய அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் இடையாக்குறிச்சியைச் சோ்ந்த வெ. வீரமணி(45) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனா்.