இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி: இருவா் கைது
பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பழனி இந்திரா நகரைச் சோ்ந்தவா் பிரேமா(50). இவா், கடந்த மே 1-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அமரபூண்டிக்குச் சென்றபோது, ரூக்குவாா்பட்டி அருகே இரு மா்மநபா்கள் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து தப்பிச் சென்றனா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்கு தொடா்பாக புதன்கிழமை ஆயக்குடி போலீஸாா் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிபுளியைச் சோ்ந்த நண்டு (எ) மாரீஸ்வரன் (23), சிவகங்கையைச் சோ்ந்த ஜெயராமன்(25) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.