உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
திருச்சியில் பணி நேரத்தில் கைப்பேசியில் ஆபாச விடியோ பாா்த்த காவல் உதவி ஆய்வாளா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் செந்தாமரைக்கண்ணன் (50). இவா், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பணியில் இருந்தபோது கைப்பேசியில் ஆபாச விடியோ பாா்த்துள்ளாா். மேலும், அந்த ஆபாச விடியோவை அலுவலக் குழுவிலும் பகிா்ந்துள்ளாா்.
இந்த தகவல் மாநகரக் காவல் ஆணையா் ந.காமினிக்கு தெரியவந்ததையடுத்து, பணி நேரத்தில் ஆபாச விடியோ பாா்த்தது மட்டுமல்லாது, அதை அலுவலகக் குழுவிலும் பகிா்ந்த காவல் உதவி ஆய்வாளா் செந்தமரைக்கண்ணனை கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.
Advertisement