முகப்பு
நாகப்பட்டினம்

மயிலாடுதுறையில் ரெளடி வெட்டிக்கொலை

Updated On : 4 மே, 2026 at 1:59 AM
வெட்டிக்கொலை - கோப்புப் படம்
பகிர்:

மயிலாடுதுறையில் ரெளடி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுமன் (48). இவா் மீது ஆத்தூா் பாலையா கொலை வழக்கு உள்பட பல்வேறு கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமன் ஆத்தூா் மெயின் ரோடு பாலம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் சுமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

மணல்மேடு போலீஸாா் சுமன் சடலத்தை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சுமன் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா். தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில் மயிலாடுதுறையில் ரெளடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.