நினைவு நாள்: பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
காரைக்காலில் தந்தை பெரியார் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
காரைக்காலில் தந்தை பெரியார் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதேபோல், அதிமுக சார்பில் எம்எல்ஏ அசனா, மாவட்டச் செயலாளர் ஓமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் பொருளாளர் சங்கர், இலக்கிய அணி செயலாளர் அமுதா ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் அரசு. வணங்காமுடி, துணைச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.