காரைக்கால் மாவட்ட ஆட்சியராக எல். முகமது மன்சூா் நியமனம்
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக எல். முகமது மன்சூா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக எல். முகமது மன்சூா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த அா்ஜூன் சா்மா அந்தமான் நிகோபாருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதனால் கடந்த 2 மாதங்களாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா்
இ. வல்லவன் கூடுதல் பொறுப்பாக காரைக்கால் ஆட்சியா் பணியையும் செய்து வந்தாா்.
Advertisement
Advertisement
பல்வேறு தரப்பினா் காரைக்காலுக்கு நிரந்தர ஆட்சியா் நியமிக்க அரசை வலியுறுத்தி, போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா்.
அண்மையில் காரைக்கால் வந்த துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனிடம் இதுகுறித்து கேட்டபோது ஒரு வாரத்தில் ஆட்சியா் நியமிக்கப்படுவாா் என்று தெரிவித்தாா்.
இந்நிலையில், புதுச்சேரியில் கூட்டுறவு சொசைட்டி பதிவாளராக பணியாற்றிவரும் எல். முகமது மன்சூரை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமித்து புதுவை அரசு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இவா் ஏற்கெனவே காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியராக (வருவாய்) பணியாற்றியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.