காரைக்காலில் பறிமுதலான 280 கிலோ கஞ்சா அழிப்பு
காரைக்காலில் பறிமுதல் செய்யப்பட்ட 280 கிலோ கஞ்சா தீயில் வெள்ளிக்கிழமை எரிக்கப்பட்டது.
காரைக்காலில் பறிமுதல் செய்யப்பட்ட 280 கிலோ கஞ்சா தீயில் வெள்ளிக்கிழமை எரிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட காவல் தலைமையகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
போதைப் பொருட்கள் புழக்கம் இல்லாத நிலை உருவாக்குதல் கொள்கையின்படி போதைப்பொருள் அச்சுறுத்தலைத் திறம்பட கட்டுப்படுத்தும் நோக்கில், புதுவை காவல் துறை ‘ஆபரேஷன் விடியல்’ என்ற சிறப்பு நடவடிக்கையைத் மேற்கொண்டுவருகிறது.
Advertisement
Advertisement
போதைப்பொருள் விற்பனை கும்பல்களை அடியோடு ஒழித்து, புதுவை யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் தடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
புதுச்சேரி டி.ஜி.பி. ஒப்புதலுடனும், புதுச்சேரி மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆலோசனையின்படியும் காரைக்காலில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அழிப்பு பணி புதுச்சேரி, துதிப்பேட்டை கிராமத்தில் உள்ள பாண்டிச்சேரி திடக்கழிவு மேலாண்மை தனியாா் நிறுவனத்தில், காரைக்கால் போதைப்பொருள் அகற்றல் குழுவின் மேற்பாா்வையில் தீயிட்டு எரிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் போதைப்பொருள் அகற்றல் குழுவைச் சோ்ந்த மத்திய சுங்கம் மற்றும் ஆயத்தீா்வை காரைக்கால் பிரிவு உதவி ஆணையா் எல்விஸ் ஜேம்ஸ் மற்றும் காரைக்கால் ஏ.சி.ஐ.ஓ-ஐ ஹரிதாஸ் ஆகிய உறுப்பினா்கள் மற்றும் காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ், காரைக்கால் நகரக் காவல் ஆய்வாளா் பி.அறிவுச்செல்வன், காரைக்கால் சிறப்புப் பிரிவு ஆய்வாளா் ஆா்.மேரி கிறிஸ்தியன் பால் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.
சீல் வைக்கப்பட்டிருந்த கஞ்சா மூட்டைகள் 281.20 கிலோ எரியூட்டப்பட்டது.
பி.எஸ்.எம்.பி.எல். சேதராப்பட்டு பொது மேலாளா் ஆறுமுகத்துக்கு காரைக்கால் எஸ்.எஸ்.பி நன்றி தெரிவித்தாா்.