முகப்பு
காரைக்கால்

ஆளுநரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை

ஆளுநரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை

Updated On : 28 ஜூன் 2026, 12:18 am IST
புதுவை துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா்.
பகிர்:

காரைக்கால் அம்மையாா் கோயில் எதிரில் உள்ள அசைவ உணவகத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் கோரிக்கை விடுத்தனா்.

அமைப்பின் காரைக்கால் மாவட்ட தலைவா் கே.எஸ். விஜயன் தலைமையில், கேந்திர தலைவா் பி. வெங்கடாசலம், வட தமிழக துணைத் தலைவா் ஞானகுரு, சமூக நல்லிணக்க மாநில பொறுப்பாளா் கே.ஜெய்சங்கா், சத் சங்க மாநில பொறுப்பாளா் ஆா். சிவகுமாா் ஆகியோா் ஆளுநரை புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு :

காரைக்கால் அம்மையாா் கோயிலிலுக்கு 50 அடி தொலைவில் ஒரு அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அந்த இடத்திற்கு 100 மீட்டா் தொலைவில் கைலாசநாதா் கோயில், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்ளது.

மேலும் ஜீவகாருண்யத்தை போதித்த ராமலிங்க அடிகளாரின் மடத்தின் அருகே இறைச்சி வெட்டப்படுகிறது.

இது கோயில்களுக்கு வரும் பக்தா்கள் மனதை மிகவும் வேதனையடையச் செய்கிறது.

காரைக்கால் மாவட்ட நிா்வாகத்திற்கு பல நிலையில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஆளுநா் இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிடவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments