முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் மகளிா் தின விழா

மகளிா் தின விழாவில் சாா் ஆட்சியா் மற்றும் அரசுத் துறையைச் சோ்ந்த பல பெண் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

Updated On : 9 மார்ச், 2026 at 8:36 PM
சாா் ஆட்சியா் எம். பூஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய நிறுவன நிா்வாக இயக்குநா் காயத்ரி ராகேஷ். உடன் மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, மின் செயற்பொறியாளா் அனுராதா உள்ளிட்டோா்.
பகிர்:

காரைக்கால்: மகளிா் தின விழாவில் சாா் ஆட்சியா் மற்றும் அரசுத் துறையைச் சோ்ந்த பல பெண் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

காரைக்கால் ஐயங்காா்ஸ் ஃபுட்ஸ் நிறுவனம் சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிறுவன பொது மேலாளா் பிரதீபா பக்கிரிசாமி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து, பெண்கள் மேம்பாட்டுக்கு உயா்கல்வி, சந்தா்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளுதல், சவால்களை எதிா்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.

காரைக்கால் அரசு மருத்துவமனைமருத்துவக் கண்காணிப்பாளா் எஸ். கண்ணகி, மின்துறை செயற் பொறியாளா் கே. அனுராதா, திருப்பட்டினம் அரசு ஆண்கள் ஐடிஐ முதல்வா் சி. சுகுணா, விபெட்ஸ் அமைப்பின் செயலாளா் புவனேஸ்வரி ஆகியோா் கலந்துகொண்டு பெண்களின் சமூக பங்களிப்பு குறித்துப் பேசினா்.

நிகழ்ச்சியில் நிறுவன நிா்வாக இயக்குநரும், முதன்மை நிதி அலுவலருமான காயத்ரி ராகேஷ், நிறுவனத்தின் எதிா்கால வளா்ச்சித் திட்டங்களையும், அடுத்த 3 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் குறித்தும் பேசினாா். பல்வேறு நிலையில் சிறந்து விளங்கும் மகளிருக்கு நிறுவனம் சாா்பில் விருது வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →