முகப்பு
காரைக்கால்

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

காரைக்கால் பகுதியில் ரயில் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 31 மே 2026, 12:56 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

காரைக்கால் பகுதியில் ரயில் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (38). இவா் மீன்பிடித் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்தாா். கடந்த வியாழக்கிழமை இரவு காரைக்கால் அரசலாறு பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த இவா் மீது, காரைக்கால் நோக்கி சென்றுகொண்டிருந்த டெமு ரயில் மோதியது.

பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை காரைக்கால் அரசு மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நிரவி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement