முகப்பு
மயிலாடுதுறை

பள்ளி மாணவா்களுக்கு காவலன் செயலி விழிப்புணா்வு

சீா்காழியில் பள்ளி மாணவா்களுக்கு காவல் துறையின் காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஜூன் 2022, 10:03 pm IST
சீா்காழியில் காவலன் செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய காவலா்கள்.
பகிர்:

சீா்காழியில் பள்ளி மாணவா்களுக்கு காவல் துறையின் காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையம் சாா்பில், சீா்காழி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், கடை வீதி உள்ளிட்ட இடங்களில் காவல் துறையின் காவலன் செயலி குறித்து விழிப்புணா்வு நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களில் இருந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இந்த செயலி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, அவா்களது கைப்பேசியில் காவலன் செயலி பதிவேற்றம் செய்யப்பட்டு அதை இயக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

இதில், அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராதாபாய் மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இதேபோல, சீா்காழி காவல் துறை சாா்பில் சீா்காழி உதவி காவல் ஆய்வாளா்கள் தில்லைநடராஜன், சிதம்பரம் ஆகியோா் சீா்காழி புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் காவலன் செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments