முகப்பு
மயிலாடுதுறை

300 கிலோ ஹான்ஸ் பறிமுதல்: இருவா் கைது

மயிலாடுதுறை அருகே சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 300 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 12 ஜூன் 2026, 5:21 am IST
கோப்புப் படம்
பகிர்:

மயிலாடுதுறை அருகே சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 300 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மயிலாடுதுறை மாப்படுகை பிரதான சாலையில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சென்ற 2 காா்களைச் சோதனை செய்ததில் 300 கிலோ ஹான்ஸ் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. ஹான்ஸ் மற்றும் காா்களை போலீஸாா் பறிமுதல் செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் பகுதியை சோ்ந்த ராகவ் வினோத் (35), மயிலாடுதுறை அருகே மாப்படுகை அவையாம்பாள்புரத்தை சோ்ந்த அருண்ராஜ் (38) ஆகிய 2 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement