சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி
நாகை மாவட்டம், பொறையாறு ராஜம்பாள் தெருவிலுள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 18-ஆம் ஆண்டு தேர் பவனி மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், பொறையாறு ராஜம்பாள் தெருவிலுள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 18-ஆம் ஆண்டு தேர் பவனி மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதன்படி, மிக்கேல் ஆண்டவர், தேவமாதா, குழந்தை ஏசு, செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆகிய சொரூபங்கள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
முன் வரிசையில் பெண்கள் பழங்கள், இனிப்பு வகைகள், புடவைகள், வளையல்கள் அடங்கிய சீர்வரிசை பொருள்களை சுமந்து வந்தனர்.
ராஜம்மாள் தெரு, மொய்தீன் தெரு, மரைக்காயர் வீதி உள்ளிட்ட வீதிகளின் வழியாக பேண்டு வாத்தியங்கள் முழங்க பாடல்களை பாடிக்கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து, ஆலயத்தில் நிர்வாகி மைக்கேல்ராஜ் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.
இதில், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பொறையாறு காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில், ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.