முகப்பு
நாகப்பட்டினம்

பூசாரிகள் நலவாரியத்தை புதுப்பிக்க வலியுறுத்தல்

பூசாரிகளின் நலவாரியத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமக் கோவில் பூசாரிகள் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Updated On : 24 ஜூன் 2022, 10:12 pm IST
பகிர்:

பூசாரிகளின் நலவாரியத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமக் கோவில் பூசாரிகள் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் நாகை மாவட்டக் கூட்டம், நாகையை அடுத்த மஞ்சக்கொல்லையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கே. மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ. துரைராஜ் முன்னிலை வகித்தாா். மாநில நிா்வாகிகள் எஸ். ராஜா, ஏ. பாலசுப்பிரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கூட்டத்தில், பூசாரிகள் நலவாரியத்தை புதுப்பிக்கவும், கிராமக் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ. 10 ஆயிரம் வழங்கவேண்டும், கோயில் இடங்களிலியே பூசாரிகளுக்கு குடியிருப்புகளைஅமைத்துக்கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments