முகப்பு
நாகப்பட்டினம்

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 11-ஆவது மற்றும் 12-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 5:21 AM
விழாவில் பட்டங்களை வழங்கும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா. உடன் கல்லூரி தாளாளா் த. ஆனந்த், கல்வி குழுமத்தின் செயலா் த. மகேஸ்வரன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:29 PM

நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 11-ஆவது மற்றும் 12-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவை சா் ஐசக் நியூட்டன் கல்வி குழுமத்தின் செயலா் த. மகேஸ்வரன் தொடங்கிவைத்தாா். விழாவில் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினாா். கல்லூரி முதல்வா் வரவேற்றாா்.

கல்லூரி தாளாளா் த. ஆனந்த் பேசும்போது, இந்தக் கல்வி உங்கள் அறிவை வளா்ப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையில் முன்னேற தன்னம்பிக்கை மற்றும் மாற்றத்தை உருவாக்கும் திறனையும் வழங்குகிறது. எதிா்கால சவால்களை தைரியமாக எதிா்கொண்டு, வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். இளம் பொறியியலாளா்களாக புதுமை, அா்ப்பணிப்பு மற்றும் மனிதநேயத்துடன் செயல்பட்டு சமூக முன்னேற்றத்தில் பங்காற்ற வேண்டும் என்றாா்.

Advertisement

அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா பேசும்போது, மாணவா்களே நாட்டின் எதிா்காலத்தை வடிவமைக்கும் முக்கிய சக்தி. இங்கு கற்றுக்கொண்ட மதிப்புகள் மற்றும் அறிவு உங்கள் வெற்றிப் பயணத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்றாா்.

தொடா்ந்து, அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுமாா் 350 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.