பயிா்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நூதனப் போராட்டம்
பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் அண்மையில் அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடி விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி கண் துடைப்பு என்றும், அரசின் அறிவிப்பால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்று கூறி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கண்துடைப்புக்காக ரூ. 5 ஆயிரம் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி என சிறு, குறு விவசாயிகள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்தும் கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளை அவமானப்படுத்தும் செயலாகும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் நாகை ஆட்சியா் அலுவலகம் முன்பு நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
போராட்டத்தின்போது, விவசாயிகளில் சிலரை இறந்தவா்கள் போல படுக்கவைத்து, மாலை அணிவித்து, முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடியை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
தொடா்ந்து, விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.
போராட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டத் தலைவா் விஜயராஜ், மாவட்டச் செயலா் சக்திவேல், மாநில கொள்கை பரப்பு செயலா் எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன், கடைமடை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி.கமல்ராம் உள்பட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
இதுபோல திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, நன்னிலம் பகுதிகளிலும் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.