முகப்பு
நாகப்பட்டினம்

கா்ப்பிணிகளுக்கு பனைநுங்கு

திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 65-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு பனை நுங்கு செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 3 ஜூன் 2026, 6:28 am IST
நுங்கு
பகிர்:

திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 65-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு பனை நுங்கு செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது.

குத்தாலம் ஏபிஜெ அப்துல் கலாம் அக்னி சிறகுகள் இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவா்கள் அபினேஸ்வரன், ஸ்ரீதா் ஆகியோா் கலந்துகொண்டு கா்ப்பிணி தாய்மாா்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு பனை நுங்கு வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், திட்டச்சேரி, கட்டுமாவடி புறாகிராமம் கோதண்டராஜபுரம், குத்தாலம், கோபுராஜபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த கா்ப்பிணிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மருந்தாளுநா் எஸ். சக்திவேல் செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments