முகப்பு
நாகப்பட்டினம்

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 14 ஆண்டுகள் சிறை

கீழ்வேளூரில் வழிப்பறியில் ஈடுபட்டு 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 5 ஜூன் 2026, 7:14 am IST
பகிர்:

கீழ்வேளூரில் வழிப்பறியில் ஈடுபட்டு 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்தவா் சிற்றரசு (39) (படம்). இவா், 2022-ஆம் ஆண்டு அப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை வழிமறித்து 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றாா்.

கீழ்வேளூா் போலீஸாா் சிற்றரசுவை கைது செய்து, நாகப்பட்டினம் மாவட்ட குற்றவியல் நடுவா் மன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிற்றரசுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி கிருஷ்ணன் தீா்ப்பளித்தாா். சிற்றரசு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments