பெருமாள் கோவில்களில்நாளை உதய கருட சேவை
அட்சய திருதியை முன்னிட்டு காரைக்கால் பகுதி பெருமாள் கோவில்களில் திங்கள்கிழமை (மே 13) உதய கருட சேவை நடைபெறுகிறது.
அட்சய திருதியை முன்னிட்டு காரைக்கால் பகுதி பெருமாள் கோவில்களில் திங்கள்கிழமை (மே 13) உதய கருட சேவை நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் தங்க நகைகள் வாங்குவதும், பெருமாள் கோவில்களில் உதய கருட சேவையை தரிசிப்பதும் சிறப்புக்குரியதாக மக்கள் கருதுகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பெருமாள் கோவில்களில் திங்கிள்கிழமை சூரிய உதய நேரத்தில் கோவிலில் இருந்து கருடனில் பெருமாள் வீற்றிருந்தவாறு, வீதியுலா புறப்பாடு செய்யப்படும். காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இந்த சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் செவ்வாய்க்கிழமை ராமானுஜர் 996 அவதார நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.