முகப்பு
திருவாரூர்

இளைஞர் தற்கொலை 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை  அருகே மது அருந்தியதை தந்தை கண்டித்ததால், விஷம் குடித்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 6:45 am IST
பகிர்:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை  அருகே மது அருந்தியதை தந்தை கண்டித்ததால், விஷம் குடித்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
 திருத்துறைப்பூண்டியை அடுத்த கற்பகநாதர்குளம் குடிசேத்தி கிராமத்தைச் சேர்ந்த பத்மநாதன் மகன் மாதவன் (22). இவர் மது அருந்தியதை தந்தை கண்டித்ததால், விரக்தியில் விஷமருந்தி மயங்கினார். இதைத்தொடர்ந்து, மாதவனை உறவினர்கள் மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு அவர் திங்கள்கிழமை இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.