காவிரி: இணையதள நண்பர்கள் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட இணையதள நண்பர்கள் குழுவினர் திருத்துறைப்பூண்டியில் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட இணையதள நண்பர்கள் குழுவினர் திருத்துறைப்பூண்டியில் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில், இந்த அமைப்பின் சார்பில் வி.எஸ்.பி. மணிகண்டன், எம். ஜெயபிரபாகர், எஸ். மணிகண்டன், வி.பி. ராகவன், ஜெ. குருமூர்த்தி, எம். பாலாஜி ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதத்தில் நமது நெல்லைக் காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன், வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எஸ். செந்தில்குமார், நகர மேம்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் டி. ராஜா,
நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.எஸ். பாண்டியன் உள்ளிட்ட திரளானோர் ஆதரவு தெரிவித்து, உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.