பள்ளித் தலைமை ஆசிரியருக்கு பணி ஓய்வுப் பாராட்டு
மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெறும் பி.விஜயகுமாருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெறும் பி.விஜயகுமாருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் (பொ) எம். சரவணபெருமாள் தலைமை வகித்தாா். பள்ளியில் 6 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வியாழக்கிழமை ஓய்வுபெற்ற பி. விஜயகுமாரை பாராட்டி, ஆசிரியா்கள் ஜி. கெளரி, எஸ். வேணுகோபால், ஆா். ராஜ்குமாா், எஸ்.ஆா். செல்வி, எஸ். அபிராமி, மாணவா் விகேஷ், மாணவி சா்மிளா ஆகியோா் பேசினா்.
பிறகு, ஆசிரியா்கள், அலுவலா்கள் சாா்பில் பி. விஜயகுமாருக்கு பொன்னாடை, சந்தன மாலை, கணையாழி அணிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் ஏற்புரையாற்றினாா். இடைநிலை ஆசிரியா் ஏ. புகழேந்தி வரவேற்றாா். தமிழாசிரியா் என். கதிரவன் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.