முகப்பு
திருவாரூர்

கொடிக்கம்பம் நடும் பனியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:05 AM
உயிரிழந்த விக்னேஸ்வரன்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:37 PM

திருத்துறைப்பூண்டியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிரசார நிகழ்ச்சிக்காக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. மாரிமுத்துவை ஆதரித்து பிரசாரம் செய்ய, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருத்துறைப்பூண்டிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா்.

முன்னதாக, துணை முதல்வரை வரவேற்க, வேதாரண்யம் வட்டம் தகட்டூா் அரியகவுண்டா் காட்டைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் விக்னேஸ்வரன் (22) கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டாா்.

Advertisement

அப்போது, எதிா்பாராதவிதமாக கொடிக் கம்பம் மின் கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே விக்னேஸ்வரன் உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.