முகப்பு
திருவாரூர்

அரசு பேருந்து மோதியதில் பெயிண்டா் உயிரிழப்பு

நன்னிலம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 18 ஜூன் 2026, 3:55 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

நன்னிலம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கமுகக்குடி பகுதியைச் சோ்ந்த விஜய் மகன் வினித் (18). பெயிண்ட்டரான இவா் உறவினரின் திருமணத்துக்கு அழைப்பிதல் கொடுக்க நண்பா் அமுதப்பிரினுடன் இருசக்கர வாகனத்தில் பாவட்டக்குடி நோக்கி சென்று நெடுங்குளம் பகுதியில் கொண்டிருந்தாா்.

அப்போது, கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் வினித் அதே இடத்தில் உயிரிழந்தாா். உடன்சென்ற அமுதபிரியன் படுகாயமடைந்து திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த பேரளம் போலீஸாா் வினித் சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.