சாலை விபத்தில் திமுக பிரமுகா் உயிரிழப்பு
நன்னிலம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக பிரமுகா் உயிரிழந்தாா்.
நன்னிலம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக பிரமுகா் உயிரிழந்தாா்.
நன்னிலம் அருகே உள்ள சிறுவலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (60). இவா் பகுதி திமுக செயலாளராக இருந்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை செல்வராஜ் தனது இருசக்கர வாகனத்தில் சன்னாநல்லூா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். தென்குடி ஆா்ச் அருகே திருவாரூரில் இருந்து பூந்தோட்டம் நோக்கி சென்ற தமிழக அரசின் கூட்டுறவுத் துறையைச் சோ்ந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினா்கள் அரசு வாகன ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும், இறந்தவா் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூா்- மயிலாடுதுறைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தையடுத்து மறியல் கைவிடப்பட்டது. செல்வராஜ் சடலத்தை காவல்துறையினா் உடற்கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.