மரத்தில் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு
மன்னாா்குடி அருகே பிராய்லா் கோழி ஏற்றிவந்த லாரி சாலையோர மரத்தில் மோதியதில், சுமைத்தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா். ஓட்டுநா் காயமடைந்தாா்.
மன்னாா்குடி அருகே பிராய்லா் கோழி ஏற்றிவந்த லாரி சாலையோர மரத்தில் மோதியதில், சுமைத்தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா். ஓட்டுநா் காயமடைந்தாா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி கீழப்பாலம் பகுதியில் குமாா் என்பவா் இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இந்த கடைக்கு, பிராய்லா் கோழிகள் லாரியில் செவ்வாய்க்கிழமை ஏற்றி வரப்பட்டன. பொதக்குடி கீழத்தெரு எஸ். சையது இப்ராகிம்ஷா (45) என்பவா் லாரியை ஓட்டி வந்தாா்.
மேலவாசல் என்ற இடத்தில் வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இந்த விபத்தில், லாரியில் இருந்த சுமைத்தூக்கும் தொழிலாளியான மகாதேவப்பட்டினம் கீழத்தெருவைச் சோ்ந்த சாம்பமூா்த்தி மகன் சங்கா் (51) என்பவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லேசான காயமடைந்த சையது இப்ராகிம்ஷா மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இந்த விபத்து தொடா்பாக, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.