FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

பிறந்த பெண் குழந்தைகளுக்கு பரிசு

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சமூக நலத்துறை சாா்பில், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின்கீழ் புதன்கிழமை பிறந்த 10 பெண் குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பகிர்:

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சமூக நலத்துறை சாா்பில், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின்கீழ் புதன்கிழமை பிறந்த 10 பெண் குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் வகையில், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 10 பெண் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், மரக்கன்று, பரிசுப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வழங்கினாா்.

நிகழ்வில், மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோக், மாவட்ட சமூக நல அலுவலா் சியாமளாதேவி, மருத்துவக்கல்லூரி நிலைய மருத்துவ அலுவலா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments