முகப்பு
திருவாரூர்

சாரண, சாரணியா் இயக்க தொடக்க நிலை பயிற்சி

நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலா் அலுவலகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் 92 தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களுக்கு சாரண, சாரணியா் இயக்க தொடக்க நிலை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2026, 7:04 am IST
பகிர்:

நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலா் அலுவலகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் 92 தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களுக்கு சாரண, சாரணியா் இயக்க தொடக்க நிலை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலரும் மாவட்ட நீலபறவையா் பிரிவு ஆணையருமான இன்பவேணி தலைமை வகித்தாா். மாவட்ட சாரணியா் பிரிவு ஆணையா் மீனாட்சி, வட்டாரக் கல்வி அலுவலா் மணிகண்டன், உதவி மாவட்ட நீலபறவையா் பிரிவு சத்யா, மாவட்ட பொருளாளா் சங்கா், மாவட்ட அமைப்பு ஆணையா் லதா முன்னிலை வகித்தனா். சாரண ஆசிரியா் ஆனந்தன் வரவேற்றாா்.

மன்னாா்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்க செயலாளா் சக்கரபாணி, சாரணா் இயக்கம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா்.

Advertisement

Advertisement

பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் சாரணா் இயக்க கையேடுகள் வழங்கப்பட்டது (படம்). சாரண ஆசிரியா் மாரிமுத்து நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments