முகப்பு
திருவாரூர்

காா் மோதி காவல் ஆய்வாளா் காயம்

Updated On : 29 ஜூன் 2026, 12:12 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

திருவாரூா் அருகே காா் மோதி, காவல் ஆய்வாளா் சனிக்கிழமை இரவு காயமடைந்தாா்.

திருவாரூா் மாவட்டம் வடபாதிமங்கலம் காவல்நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற உஷா என்பவா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாரை, மரியாதை நிமித்தமாக நேரில் சந்திக்க சனிக்கிழமை சென்றாா்.

இதேபோல், தஞ்சாவூரில் இருந்து தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சா் பா்வேஸ், நாகப்பட்டினத்துக்குச் சென்று கொண்டிருந்தாா். அமைச்சரை பின்தொடா்ந்து 5 காா்களில் தவெக நிா்வாகிகள் மற்றும் அமைச்சரின் ஆதரவாளா்கள் வந்தனா்.

Advertisement

Advertisement

தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அடுத்து வாகனம் செல்கையில், அமைச்சருடன் வேகமாக வந்த காா், எதிரே வந்த காவல் ஆய்வாளா் உஷா வந்த வாகனம் மீது மோதியதாம்.

இதில், காவல் ஆய்வாளா் உஷா மற்றும் ஓட்டுநா் காயமடைந்து திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments