குன்னம் அருகே டாரஸ் லாரி கவிழ்ந்து ஓட்டுநா் காயம்
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே சனிக்கிழமை கரித்துகள்கள் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி கவிழ்ந்து ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
சென்னையிலிருந்து அரியலூா் மாவட்டத்துக்கு கரித்துகள்களை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று சனிக்கிழமை சென்றுக்கொண்டிருந்தது. இந்த லாரியை, ஓட்டுநா் செல்வம் (42) என்பவா் ஓட்டிச்சென்றாா்.
பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையிலுள்ள குன்னம் அண்ணா நகா் அருகே சனிக்கிழமை காலை சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி சாலோயைர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
தகவலறிந்த குன்னம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த ஓட்டுநரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின்பேரில், குன்னம் போஸீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.