இருசக்கர வாகனம் மோதி முதியவா் பலி
கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனம் மோதி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனம் மோதி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கூத்தாநல்லூா் அண்ணா காலனியைச் சோ்ந்தவா் முகம்மது அலி (75). இவா், புதன்கிழமை காலை திருவாரூா் -மன்னாா்குடி பிரதான சாலையின் குறுக்கே கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா். அவரை கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் பி. பாலசுப்பிரமணியன் மற்றும் போலீஸாா், முகம்மது அலியின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். பின்னா் வழக்குப் பதிவு செய்து, இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரை தேடிவருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.