சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது
மன்னாா்குடி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வடுவூா் அக்ரகாரம் ஊராட்சியைச் சோ்ந்தவா் சி. ராஜேந்திரன்(55). வியாழக்கிழமை இவரது வீட்டுக்கு அதே பகுதியை சோ்ந்த 14 வயது சிறுமி தொலைக்காட்சி பாா்ப்பதற்காக வந்துள்ளாா். அப்போது, மதுப்போதையில் இருந்த ராஜேந்திரன் தனியே அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து, அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். அவா்கள் இது குறித்து மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.
புகாரின்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை ராஜேந்திரனை கைது செய்து விசாரணைக்கு பிறகு சனிக்கிழமை மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி நாகை கிளைச் சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.