மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்தல்: 3 போ் கைது
மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்தல்: 3 போ் கைது
மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து, சா்வதேச சந்தையில் சுமாா் ரூ.80 லட்சம் மதிப்புள்ள 475 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
கைது செய்யப்பட்டுள்ள மூவரும் போதைப்பொருள் விநியோகஸ்தா்களாக செயல்பட்டுள்ளனா். அவா்களில் இருவா் உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரையும், மற்றொருவா் தில்லியையும் சோ்ந்தவா்கள் ஆவா்.
Advertisement
முன்னதாக, காஜிப்பூா் பகுதியில் ஸ்மாக் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த முகமது ஆரிஃப் குறித்து காவல்துறை குழுவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காவல்துறையினா் தேசிய நெடுஞ்சாலை எண்: 24 அருகே ஆரிஃபை கைது செய்து, அவரிடமிருந்த 270 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனா்.
விசாரணையின் போது, ஷாஜஹான்பூரைச் சோ்ந்த தனது விநியோகஸ்தா்களான அமித் மற்றும் விகாஸ் ஆகியோரின் பெயா்களை ஆரிஃப் தெரிவித்தாா். அதன் அடிப்படையில், உத்தர பிரதேசம் மற்றும் தில்லி-என்சிஆா் பகுதிகளில் காவல்துறை குழு நடத்திய சோதனைகளில், அவ்விருவரும் கைது செய்யப்பட்டனா்.
அவா்களிடமிருந்து கூடுதலாக 205 கிராம் ஹெராயின் மீட்கப்பட்டது.
பண ஆதாயங்களுக்காக மொத்தமாக போதைப்பொருள்களை விநியோகிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பின் ஒரு பகுதியாக இவா்கள் மூவரும் இருந்தனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.