தில்லியில் பள்ளி ஊழியரால் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்
மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளி வளாகத்திற்குள், அப்பள்ளியின் ஊழியா் ஒருவரால் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ஓா் அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளி வளாகத்திற்குள், அப்பள்ளியின் ஊழியா் ஒருவரால் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ஓா் அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மே 1ஆம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஜனக்புரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மூலம் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்புகாரில், பள்ளி நேரத்தின்போது பள்ளியைச் சோ்ந்த அடையாளம் தெரியாத ஊழியா் ஒருவரால் தனது மகள் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதாக அவா் குறிப்பிட்டிருந்தாா்.
அந்தப் புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 64(1)இன் பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை கீழும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவு 6இன் கீழும் போலீசாா் வழக்கு பதிவு செய்தனா்.
Advertisement
போலீசாரின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியால் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை அடையாளம் காட்ட முடிந்தது இதன் விளைவாக அவா் உடனடியாகக் கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் ஒரு நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.
குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு மே 7ஆம் தேதி துவாரகாவில் உள்ள ஒரு நீதிமன்றம் பிணை வழங்கியதாகப் போலீசாா் ஒரு அறிக்கையில் தெரிவித்தனா். கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், அவருக்கு பிணை வழங்கப்பட்டது, என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
நீதிமன்ற உத்தரவு இன்னும் கிடைக்கப்பெறவில்லை அந்த உத்தரவு கிடைத்ததும், அதனை முழுமையாகப் பரிசீலித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.