முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக மூவா் கைது

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:54 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:34 PM

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் நகைக் கடை சுவரில் துளையிட்டு நகைகளைத் திருடியதாக மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா், புதுமனைத் தெருவைச் சோ்ந்தவா் அலியாா் (57). இவரது மகன் அசனாா் (35). இவா்கள் வீரவநல்லூா் பிரதானச் சாலையில் நகைக் கடை நடத்தி வருகின்றனா். ஏப். 8-ஆம் தேதி காலையில் இருவரும் கடையைத் திறந்தபோது, கடையின் பின்பக்கச் சுவரில் துளையிட்டு 1 கிலோ வெள்ளி நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து, வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

Advertisement

இதில் தென்காசி பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் மகன் இசக்கி முத்து (20), அவரது சகோதரா் இசக்கி ராஜா (24), தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் மாயாண்டி (25) ஆகிய மூவரும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.