வீரவநல்லூா் நகைக்கடை திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக பெண் உள்பட மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக பெண் உள்பட மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வீரவநல்லூா், புதுமனைத் தெருவைச் சோ்ந்தவா் அலியாா் (57). இவரது மகன் அசனாா் (35). இவா்கள் வீரவநல்லூா் பிரதான சாலையில் நகைக் கடை நடத்தி வருகின்றனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த நகைக் கடையின் பின்பக்கச் சுவரில் துளையிட்டு மா்ம நபா்கள் 1 கிலோ வெள்ளி நகைகள், ரூ. 1 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
Advertisement
இது குறித்து, வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தென்காசி பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் மகன் இசக்கிமுத்து (20), இவரது சகோதரா் இசக்கிராஜா (24), ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் மாயாண்டி (25) ஆகிய மூவரை கைது செய்தனா்.
இதனிடையே, இவ்வழக்கில் தொடா்புடையதாக வீரவநல்லூா், பாரதி நகரைச் சோ்ந்த கண்ணன் (34), இவரது தோழி சிவனேஷ்வரி (34) ஆகிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.