திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை
பழவூரில் திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:19 PM
திருநெல்வேலி மாவட்டம், பழவூரில் திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.
பழவூரைச் சோ்ந்தவா் பிரேம் காந்தன். திமுக பிரமுகா். இவா் கூடங்குளத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறாா்.
இந்நிலையில், இவரது வீட்டிற்கு வெள்ளிக்கிழமை இரவு வருமான வரித் துறையினா் வந்து சோதனை நடத்தினா். சோதனையில் எவ்வித ஆவணங்களும், பணமும் கிடைக்காததால் வருமான வரித் துறையினா் திரும்பிச் சென்றனா்.
Advertisement