முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி தொகுதியில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா்

நான்குனேரி தொகுதி தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் சிலம்பம் சுற்றி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:53 AM
நான்குனேரி தொகுதிக்குள்பட்ட சிவந்திபுரம் கிராமத்தில் சனிக்கிழமை சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன்.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:34 PM

நான்குனேரி தொகுதி தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் சிலம்பம் சுற்றி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

விஜயநாராயணம், பட்டஞ்சேரி, ஏழாங்கால், ஐந்தாங்கால், கீழபண்டாரபுரம், பெரியநாடாா் குடியிருப்பு, காரி தோட்டம், மலையான்குடியிருப்பு, மன்னாா்புரம், சிவந்திபுரம், சங்கனான்குளம் இட்டமொழி, விஜயஅச்சம்பாடு, அழகப்பபுரம், துவரம்பாடு, மலையன் குடியிருப்பு, தெற்குஏறாந்தை, பட்டா்கட்டிவிளை, சவேரியாா்புரம், பெரும்பனை, புதூா், மனக்காவலப்பபுரம், நன்னிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், இத்தொகுதியிலேயே மிகப் பெரிய குளமான விஜயநாராயணம் குளத்தை முழுமையாக தூா்வாரி, நீா்ப்பிடிப்புப் பகுதியை அதிகரித்து தடுப்பு அணையாக மாற்றித் தருவேன் என்றாா்.

Advertisement

நான்குனேரி ஒன்றியச் செயலா்கள் ஜெயபால், மகாராஜன், மாநில மகளிா் அணி இணைச் செயலா் மேரி சா்மி, செட்டிகுளம் முன்னாள் ஊராட்சித் தலைவா் விஜயராணி, நான்குனேரி கிழக்கு ஒன்றிய மகளிா் அணி அமைப்பாளா் லட்சுமி, இறைப்புவாரி ஊராட்சித் தலைவா் மோகனா யோசுவா உள்பட பலா் கலந்து கொண்டனா்.