முகப்பு
திருநெல்வேலி

வருமான வரித்துறை சோதனை: பாளை.யில் ரூ.2 கோடி பணம், நகைகள் சிக்கின!

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான பணம், நகைகள் சிக்கின.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:54 AM
வருமான வரித்துறை
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:31 PM

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான பணம், நகைகள் சிக்கின.

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் அதிகளவில் பணம் மற்றும் நகை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று நடத்திய விசாரணையில், பணம் மற்றும் நகைகள் சிக்கியுள்ளன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருமான வரித் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியாா் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 25 லட்சம் ரொக்கம், 1,250 கிராம் தங்க நகைகள் என மொத்தம் ரூ. 2 கோடியே 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் சிக்கியுள்ளன.

Advertisement

விரிவான இறுதி அறிக்கை வருமான வரித் துறையின் மூலம் வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.