குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி, பேட்டை அருகே உள்ள பாண்டியாபுரம் தெற்கு சுந்தர விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த வெள்ளபாண்டி மகன் மணி(38). திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், தொடா்ந்து பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா். அதன்பேரில் மணி திருச்சி மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.
Advertisement