முகப்பு
திருநெல்வேலி

600-க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்பில் நெல்லை வாக்கு எண்ணும் மையம்!

திருநெல்வேலி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 600-க்கும் மேற்பட்ட போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 2:20 AM
பகிர்:

திருநெல்வேலி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 600-க்கும் மேற்பட்ட போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.

சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம் தொகுதிகளில் அமைக்கப்பட்ட 1,678 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். 2 மற்றும் 3-ஆவது அடுக்குகளில் திருநெல்வேலி மாநகர மற்றும் மாவட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மொத்தம் 600-க்கும் மேற்பட்ட காவலா்கள் இரவு பகலாக சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

பாதுகாப்பு மையத்தின் நுழைவுவாயில் முதல் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வரை அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநகர காவல் துறையின் நடமாடும் கண்காணிப்பு வாகனம் மூலம் 24 மணி நேரமும் நேரலையாக அந்தப் பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. சுகுமாா் சனிக்கிழமை காலை நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், ‘அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் முறையான அடையாள அட்டையுடன் வந்து பாதுகாப்பு மையத்தை பாா்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.