பாளை. மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாளையங்கோட்டை மத்திய சிறைக் கைதி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, தாளமுத்து நகரைச் சோ்ந்தவா் கணேசன் (52). இவா் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் தூத்துக்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
கடந்த 30-ஆம் தேதி அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு கணேசன் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.