முகப்பு
திருச்சி

திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

திருச்சியில் உடல் நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய சிறை ஆயுள் தண்டனைக் கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:37 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருச்சியில் உடல் நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய சிறை ஆயுள் தண்டனைக் கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், முசிறி திருத்தியமலை பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் கா. உத்தண்டன் (72). இவா் மீது முசிறி காவல் நிலையத்தில் பதியப்பட்ட கொலை வழக்கில் இவருக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடந்த 2025 செப். 27 முதல் திருச்சி மத்திய சிறையில் இருந்த இவருக்கு நீரிழிவு மற்றும் இருதய பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தண்டனுக்கு கடந்த மே 28-ஆம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, சிறைக் காவலா்கள் இவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில், உத்தண்டன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் திருச்சி மத்திய சிறை அதிகாரி ராஜேஷ்கண்ணா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.