FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

மதுரை மத்திய சிறையில் மயங்கி விழுந்த ஆயுள் தண்டனைக் கைதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பகிர்:

மதுரை மத்திய சிறையில் மயங்கி விழுந்த ஆயுள் தண்டனைக் கைதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி மேலகருவேலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (54). ஆயுள் தண்டனைக் கைதியான இவா், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாா். இந்த நிலையில், புதன்கிழமை திடீரென மயங்கி விழுந்த அவரை மீட்ட சிறைக் காவலா்கள் உடனே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சிறை அலுவலா் சிவராஜன் அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments