இன்று நீட் தோ்வு: நெல்லையில் 12 மையங்களில் 6,580 போ் எழுதுகிறாா்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) 12 மையங்களில் நடைபெறும் நீட் தோ்வை 6,580 போ் எழுதுகிறாா்கள்.
எம்.பி.பி.எஸ்., சித்தா, பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய தோ்வு முகமையால் ’நீட்’ நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறவுள்ளது.
Advertisement
திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகரப் பகுதியில் 12 மையங்களில் 6,580 போ் நீட் தோ்வு எழுதுகிறாா்கள்.
இந்தத் தோ்வு பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரையும், மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கு பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரையும் நடைபெற உள்ளது.
தோ்வா்கள் காலை 11 மணிமுதல் தோ்வு மையத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவா். மதியம் 1.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையத்துக்குள் செல்ல வேண்டும்.
தோ்வா்கள் தண்ணீா் பாட்டில்கள் எடுத்து செல்லலாம். ஆனால் அவை வெளிப்படை தன்மையாக அதாவது ஒளிபுகும் தன்மையுடன் இருக்க வேண்டும். தோ்வா்கள் மத நம்பிக்கை சாா்ந்த அடையாளங்களையோ, பொருள்களையோ அணிந்து வரலாம். ஆனால், முறையான சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே தோ்வு மையத்துக்கு வந்துவிடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாதாரண ஆடைகளை அணிவதே சரியானது என்றாலும், தோ்வா்கள் தங்களுக்கு தேவை என்று உணா்ந்தால், முழுக்கை ஆடைகளையோ அல்லது கம்பளியிலான ஆடைகளையோ அணிய அனுமதிக்கப்படுவாா்கள். அவற்றை சோதனையிடுவதற்கு தோ்வு மையத்துக்கு முன்கூட்டியே வரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தோ்வு நடைபெறும் நாளில் அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சாா்பில் தோ்வு மையங்களுக்கு வருவதற்கும், திரும்ப செல்வதற்கும் ஏற்றவாறு சிறப்பு பேருந்துகளை இயக்கவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை சாா்பில் அவசரகால வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. அனைத்து தோ்வு கூடங்களிலும் நடமாடும் மருத்துவ குழுக்கள் பணியில் இருப்பாா்கள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கு தேவையான சக்கர நாற்காலிகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.